Wednesday, June 19, 2013



மண்ணின் மழைத்துளிகள்


வணக்கம் !!! அவசர உலகில் பயணித்து கொண்டிருக்கும் நாம் , இந்த மண்ணையும் ,மக்களையும் மறக்க தொடங்கி உள்ளோம் .எந்தவித முன்னெடுப்பும் நாம் நமக்கு பாதகம் வரும்போது மட்டுமே  அதை பற்றி சிந்திக்க தொடங்குகிறோம் .வருங்காலத்தை பற்றி நினைத்தால் என்ன ஆகுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.அடுத்த உலக போர் தண்ணீருக்காக மட்டும் என்பது உறுதியாகிறது.நிலத்தடி நீரின் அளவு குறைய தொடங்கி உள்ளது.கொஞ்ச நஞ்சம் உள்ள நீரும் பாழ் பட்டு கொண்டிருக்கின்றது. விலை நிலங்கள் மனை நிலமாகிறது.
மரங்கள் அடியோடு அழிக்க படுகின்றது. கழிவுகள் நன்நீரோடு கலந்து நாசமாகின்றது.